கோவை:வெள்ளலுார் கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 63. டி.கே., மார்க்கெட்டில் கூலி தொழிலாளி. தினமும் காலையில் வேலைக்குச் சென்று வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் அதிகாலை வேலைக்குச் செல்வதற்காக, சென்று கொண்டிருந்தார். கோணவாய்க்கால்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, குடிபோதையில் இருந்த டேவிட் ராஜா,24, அவரை அழைத்தார். அவர் வராததால், தாக்கி, கழுத்தை நெறித்ததால், கழுத்தில் காயம் ஏற்பட்டது. போத்தனுார் போலீசார், டேவிட்ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE