திருப்பரங்குன்றம் : மதுரை தனக்கன்குளம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., பேசுகையில், ''எத்தனை கட்சிகள் வந்தாலும், எத்தனை நடிகர்கள் கட்சி துவங்கினாலும் அ.தி.மு.க.,விற்கு எந்த பாதிப்பும் இல்லை. கிராமப்புற மக்களுக்கும் விரைவில் மருத்துவ வசதி கிடைக்க மினி கிளினிக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களுக்குக்கான அனைத்து திட்டங்களும் அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன'' என்றார்.எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன், நிர்வாகிகள் முத்துக்குமார், கருத்தக்கண்ணன், மாயி பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE