இடைப்பாடி: நமது செய்தி யால், இடைப்பாடி தாலுகாவில், 105 பேருக்கு, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை, சங்ககிரி ஆர்.டி.ஓ., வழங்கினார். இடைப்பாடி தாலுகாவை சேர்ந்த பலர், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு, சங்ககிரி ஆர்.டி.ஓ., அமிர்தலிங்கத்திடம் மனு அளித்திருந்தனர். அவர்கள், ஆறு மாதமாக அலைக்கழிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து, கடந்த, 23ல், நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, ஆர்.டி.ஓ., அமிர்த லிங்கம், நேற்று, இடைப்பாடி, சித்தூர் என, இரு பகுதிகளில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்தார். அதில், இடைப்பாடி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த முகாமில், உரிய ஆதாரம் வழங்கிய, 35 பேர், சித்தூரில், 70 பேர் என, ஒரே நாளில், 105 பேருக்கு, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை, ஆர்.டி.ஓ., வழங்கினார். இதனால், சான்றிதழ் பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE