சேலம்: சேலம் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநகராட்சி பகுதிகளில், புது கட்டடத்துக்கு வரி விதித்தல், புது காலி மனை வரி விதித்தல், குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்தல், சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், பாதாள சாக்கடை இணைப்பு பெறுதல், புது கட்டட கட்டுமானத்துக்கு வரைபட அனுமதி, அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்தல் போன்ற சேவைகளுக்கு விண்ணப்பிக்க, டிச., 30ல், ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் நடக்க உள்ளது. சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகங்களில், காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும் முகாமில், மக்கள் தங்களுக்கு தேவையான சேவையை பெற விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE