பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில், வாணியாறு அணை உள்ளது. சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணைக்கு, ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து, நீர்வரத்து உள்ளது. சில வாரங்களுக்கு முன் தொடர்மழையால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த மாதம், 14ல், அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், நீர்மட்டம், 63 அடியாக உயர்ந்தது. அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும், உபரி நீர் முழுவதும் வாணியாற்றில் திறக்கப்பட்டது. கடந்த, 22ல் வினாடிக்கு, 50 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 30 கன அடியாக சரிந்தது. வரத்தான, 30 கன அடி நீரும் வாணியாற்றில் திறக்கப்பட்டது. இதன் மூலம், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி, தென்கரைகோட்டை மற்றும் பறையப்பட்டி புதூர் ஏரிகள் நிரம்பியுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE