கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே உள்ள மூக்ககவுண்டனூரை சேர்ந்தவர் பழனி, 35, கிரேன் ஆபரேட்டர்; இவர் கடந்த, 20 இரவு, போச்சம்பள்ளி - மத்தூர் சாலையிலுள்ள ஓட்டல் முன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று பேர் கும்பல், பழனியிடம் தகராறு செய்து தாக்கியது. இதில் காயமடைந்த பழனி, மத்தூர் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், மத்தூரை சேர்ந்த அல்லா பாஷா, 31, திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம்பள்ளியை சேர்ந்த வசந்த லால், 34, மத்தூர் கீழ்வீதியை சேர்ந்த சாஹிபுதீன், 34, ஆகியோர், பழனியிடம் தகராறு செய்தது தெரிந்தது. இதில் அல்லாபாஷா, வசந்த லால் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், சாஹிபுதீனை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE