கிருஷ்ணகிரி: கோழிப்பண்ணை அருகே வீசி சென்ற பச்சிளம் ஆண் சிசு உயிருடன் மீட்கப்பட்டது. கிருஷ்ணகிரி அடுத்த, வேப்பனஹள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவல்நத்தம் கிராமத்தில், கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. அதன் அருகே, நேற்று பச்சிளம் குழந்தை கதறி அழும் சத்தம் கேட்டது. அதை கேட்ட அப்பகுதி மக்கள், கோழிப்பண்ணை அருகே சென்று பார்த்தபோது, பிறந்து இரு நாட்களே ஆன பச்சிளம் ஆண் சிசு உயிருடன் கிடந்தது. அதிர்ச்சியடைந்த மக்கள், குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததால், மாவட்ட குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை கோழிப்பண்ணை அருகே வீசி சென்றவர்கள் யார், கள்ளத்தொடர்பு காரணமாக குழந்தை பிறந்ததால் வீசி சென்றார்களா என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE