எலச்சிபாளையம்: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், மாணிக்கம்பாளையம் ஏரி நிரம்பி, கடல்போல் காட்சியளிக்கிறது. எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம்பாளையம் ஏரி, 40க்கும் மேற்பட்ட ஏக்கரில் அமைந்துள்ளது. அத்தப்பம்பாளையம் திருமணிமுத்தாற்றில் இருந்து ஏரிக்கு தண்ணீர் வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பெய்த கனமழையால், ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, ஆற்றிலிருந்து வெளியேரும் உபரிநீர் ஏரிக்கு வந்து கொண்டுள்ளது. ஏரி நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றியிருக்கும் கிணறுகள், போர்வெல்கள், குளங்கள் ஆகியவற்றில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பல மாதங்களுக்கு, இப்பகுதியில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE