கரூர்: கரூர் வடக்கு நகர, தி.மு.க., சார்பில், மக்கள் சபை கூட்டம், வெங்கமேடு கொங்கு நகர் பிரதான சாலையில், செயலாளர் கணேசன் தலைமையில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில் பாலாஜி பேசியதாவது: தமிழகத்தில், 23 லட்சம் பேர் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், புதிய தொழிற்சாலைகளை, அ.தி.மு.க., கொண்டு வரவில்லை. வெங்கமேடு பகுதியில், வீட்டுமனை பத்திரப் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. அதை, தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 90 நாட்களில் சரி செய்யப்படும். தமிழக அரசு, நான்கரை லட்சம் கோடி கடனில் உள்ளது. கஜானாவை காலி செய்த, அ.தி.மு.க.,வை வரும் தேர்தலில் நிராகரிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE