கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டு மகாதானபுரம், மகாதானபுரம், பொய்கைப்புத்தூர், லாலாப்பேட்டை, பிள்ள பாளையம், கருப்பத்தூர், கள்ளப்பள்ளி, திருக்காம்புலியூர், ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் பூவன், கற்பூரவள்ளி ரகங்கள் அதிகளவில் சாகுபடி நடக்கிறது. இதுகுறித்து, மகாதானபுரம் விவசாயிகள் கூறியதாவது: கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், 5,000 ஏக்கரில் வாழை சாகுபடி நடந்துள்ளது. தற்போது கொரோனா காலம் என்பதால் வெளி மாவட்ட விற்பனை மந்தம், மற்றும் கோவிலில் வழிபாடு பிரச்னை, பனி காலம் போன்ற காரணங்களால் மக்கள் பூவன் வாழைத்தார் வாங்குவதில் பாதிப்பு உள்ளது. தார் ஒன்று, 30 ரூபாய்க்கே விற்பனையாகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE