கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பஞ்., தலைவர் பிரேமலதா தலைமை வகித்தார். மேட்டு மகாதானபுரம் கடைவீதி, திருச்சி, கரூர் நெடுஞ்சாலை கடைவீதி ஆகிய இடங்களில் நடந்த பேரணியில், மட்கும் குப்பை, மட்காத குப்பையை தரம் பிரித்து வழங்குவது, பிளாஸ்டிக் கழிவு பயன்பாடு குறைத்தல், சுற்றுப்புறத் தூய்மை, விவசாய நிலம் பாதிப்பு தவிர்த்தல் ஆகியவை குறித்து, துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. துணை தலைவர் கஸ்தூரி மற்றும் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE