கரூர்: பொங்கல் சிறப்பு தொகுப்புக்காக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக, அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்கள் மற்றும், 2,500 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து, நேற்று முதல், கரூர் மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் ஹஸ்ரத் பேகம் கூறியதாவது: மாவட்டத்தில், மூன்று லட்சத்து, 5,269 அரிசி ரேஷன் கார்டுகள் உள்ளன. அரசின் அறிவிப்பின்படி, தற்போது, 4,000 சர்க்கரை கார்டுகள், அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளதை சேர்ந்து, மூன்று லட்சத்து, 9,269 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். நேற்று முதல், 587 ரேஷன் கடை பணியாளர்கள், தங்கள் பகுதியில் உள்ள அரிசி அட்டைதாரர்கள் வீடு தேடிச் சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர். இந்த டோக்கன் வழங்கும் பணி வரும்,30 வரை நடக்கும். ஜன. 4 முதல், 12 வரை அனைவரும் ரேஷன் கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE