சண்டிகர்: விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் ஹரியானா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
![]()
|
ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ., ஜனநாயக் ஜன்தா கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. அதன்பின்னர் தற்போது மாநிலத்தில் மாநகராட்சி நகராட்சி, மற்றும் கிராம பஞ்.,தேர்தல் நடைபெறுகிறது. இதில் பா.ஜ., ஜனநாயக் ஜன்தா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகின்றன. விவசாயிகளின் போராட்டத்தை காரணம் காட்டி ஓம் பிரகாஷ் சவுதாலா கட்சியான இந்திய தேசிய லோக்தளம் தேர்தலை புறக்கணித்துள்ளது.
இரண்டு முறை முதல்வர் பதவி வகித்தவரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான பூபிந்தர் ஹூடா கூறுகையில் உள்ளாட்சி தேர்தல் மாநிலத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என கூறி உள்ளார்.
![]()
|
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது எனவும், வாக்குச்சாவடிகளில் சுத்திகரிப்பு செய்யப்பட்டது என கூறினர். மேலும் நகராட்சி தலைவர்களுக்கான தேர்தல் மட்டும் இயந்திரத்தின் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே நேரத்தில் மேயர் உள்ளிட்ட தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படும் எனவும் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வரும் 30ம் தேதி நடைபெறும் என தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement