மாமல்லபுரம் : கடம்பாடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடங்கள் சேதமடைந்து, ஆபத்துடன் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. கடம்பாடி, மேலகுப்பம் பகுதி மாணவர்கள், இப்பள்ளியில் படிக்கின்றனர். பள்ளி வகுப்பறை கட்டடங்கள், பல ஆண்டுகளாக, பராமரிப்பின்றி சீரழிந்துள்ளன. சுவர், மேற்கூரையில் கான்கிரீட் பெயர்ந்து, ஓட்டுக்கூரை சேதமடைந்து உள்ளன. பாலிதீன் விரிப்பால் மூடப்பட்டு, ஆபத்துடன் உள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பிற்காக, தற்போது, பள்ளி மூடப்பட்டு உள்ளது.
எனினும், பள்ளி திறக்கப்பட்டதும், கட்டட ஆபத்து கருதி, பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே, பள்ளியை திறக்கும் முன், கட்டடங்களை பராமரிக்க, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE