ஊத்துக்கோட்டை : அதிகளவு வாகனங்கள் செல்லும் பெரியபாளையம் ஆரணி ஆற்றில் மேல் கட்டப்பட்ட, பாலத்தில் செடிகள் வளர்ந்து வருவதால், அதன் உறுதி தன்மை பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சென்னை- - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் உள்ளது பெரியபாளையம் ஊராட்சி. இங்குள்ள, ஆரணி ஆற்றின் மேல் பாலம் கட்டப்பட்டு உள்ளது.இந்த பாலத்தின் வழியே, சென்னையில் இருந்து, ஊத்துக்கோட்டை, நாகலாபுரம், பிச்சாட்டூர், புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி, கர்நுால், கடப்பா ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்கின்றன.தினமும், 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பாலத்தின் வழியே செல்கின்றன. தற்போது, இந்த பாலம் பராமரிப்பின்றி உள்ளது. இந்த பாலத்தின் ஒரு பகுதியில், செடிகள் வளர்ந்து வருகின்றன.
இதனால், பாலத்தின் உறுதித்தன்மை பாதித்து, சிதிலமடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுத்து, பெரியபாளையம் ஆரணி ஆற்றில் மேல் கட்டப்பட்ட பாலத்தில் வளரும் செடிகளை அகற்ற வேண்டும் என,மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE