மதுராந்தகம் : படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்த ஆண்டுக்கான கரும்பு அரவைப் பணி துவங்கப்பட்டது.
மதுராந்தகம் அடுத்த படாளத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்குகிறது. இந்த ஆலையில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம், கரும்பு அரவை பணி துவங்கி, தொடர்ந்து ஆறு மாதங்கள் இயங்கும்.அடுத்த ஆறு மாதங்கள் கரும்பு ஆலையில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தாண்டுக்கான கரும்பு அரவை, முன்கூட்டியே, நேற்று முன்தினம் துவங்கியது.படாளம் சர்க்கரை ஆலை கூட்டுறவு சங்க தலைவர் அப்பாதுரை தலைமையில், கரும்பு விவசாயிகள் முன்னிலையில், இந்த துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது.
சங்க தலைவர் அப்பாதுரை கூறியதாவதுகடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும், 2 லட்சம் டன் கரும்புகள் வரை அரைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இந்த ஆலையின் உறுப்பினர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்ட கரும்புகளையும் அரைத்து தர முடிவெடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE