மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே, ஏரிக்கரையில் இருந்து டிராக்டர் கவிழ்ந்ததில், இரு வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மதுராந்தகம் அடுத்த, நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் மகாவிஷ்ணு 20. அதே பகுதி குமரேசன் மகன் நவீன், 20.இவர்கள், அப்பகுதி விவசாய நிலத்தில், டிராக்டர் வாகனத்தால் ஏர் உழுது, நேற்று மதியம் வீட்டுக்கு திரும்பினர்.அப்போது, அப்பகுதி ஏரிக்கரை மீது ஏறுவதற்காக, டிராக்டரை இயக்கியபோது, எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து, கீழே விழுந்தது.இந்த விபத்தில், மகாவிஷ்ணு, நவீன், அதே இடத்திலேயே உயிர் இழந்தனர். அவர்களுடன் டிராக்டரில் பயணித்த அறிவழகி, 20, டிஷா, 13, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அணைக்கட்டு போலீசார், உயிரிழந்த வாலிபர்கள் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.காயமடைந்தவர்களும், அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE