காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் பாலாஜி, 18. கடந்த ஆண்டு, பிளஸ் 2 முடித்து, பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்தார்.
நேற்று, நண்பர்கள் சிலருடன், ஓரிக்கை பாலாற்றில் குளிக்க சென்றார். பாலாஜிக்கு நீச்சல் தெரியாத நிலையில், ஆழமான பகுதியில் மூழ்கினார். நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை.தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த நிலையில், பாலாஜியை மீட்டனர். கடந்த மாதம், இதே இடத்தில், மூன்று சிறுமியர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE