கூடலுார்:முதுமலையில், 400 கி.மீ., துாரம் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில், பழங்குடியினர் ஈடுபட்டுள்ளனர்முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில், பனிப்பொழிவை தொடர்ந்து. தாவரங்கள், செடிகள் கருகி, வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. முன்னெச்சரிக்கையாக, முதுமலை வெளிப்பட்ட பகுதிக்கு உட்பட்ட, மசினகுடி, சிங்காரா, சீகூர், தெங்குமரஹாடா வனச்சரகங்களில், 400 கி.மீ., தூரம் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''தேசிய புலிகள் ஆணைய நிதி மூலம் இப்பணிநடக்கிறது. பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. சுற்றுலா பயணிகள், ஓட்டுனர்கள் தீ ஏற்படுத்த கூடிய பொருள்களை வனப்பகுதியில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE