திருப்பூர்:மாவட்டத்தில், நேற்று நடந்த திறனாய்வு தேர்வில், 3,129 பேர் பங்கேற்றனர்; 379 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.பத்தாம் வகுப்பு மாணவர்களில், சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, அவர்களின் மேற்படிப்புக்கு கல்வி உதவித் தொகை வழங்க, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்ச்சி பெறும் மாணவருக்கு, மேல்நிலை கல்வி, பட்டப் படிப்பு, முதுகலை கல்வி வரை, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.மாநில அளவிலான முதற்கட்ட தேர்வு, திருப்பூரில், 18 மையம், மாவட்டம் முழுக்க, 16 மையம் என, 34 மையங்களில் நேற்று நடந்தது. அறைக்கு, 10 மாணவர் மட்டுமே, தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணிந்திருந்தவர்கள் மட்டுமே தேர்வறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பின், 'தெர்மல் ஸ்கேனர்' மூலம் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்ட பின்பே, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.மொத்தம், 3,508 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 3,129 பேர் பங்கேற்றனர்; 379 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, அரைமணி நேர இடைவெளி விட்டு, 11:30 முதல், 1:30 மணி வரை என, இரு பிரிவாக தேர்வு நடத்தப்பட்டது.'விரைவில், இரண்டாம் கட்ட (தேசிய அளவில்) தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE