திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பேரூராட்சிக்குட்பட்ட ரேஷன் கடைகள் மூலம் அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்பட்டது.
தமிழக அரசு பொங்கல் பரிசு தொகையாக இந்த ஆண்டு ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் ரூ.2,500 மற்றும் பொங்களுக்கான தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.அதன்படி நேற்று திருக்கோவிலுர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், பேரூராட்சியில் இயங்கும் ஒன்பது ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர்கள் ரூ. 2,500 மற்றும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்களை வழங்கினார்.
இதனை கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் சிவனேசன் தலைமையில், பொது மேலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். மேலாளர் ராஜசேகர், காசாளர் சீனிவாசன் உள்ளிட்ட கூட்டுறவு சங்க அலுவலர்கள் பங்கேற்றனர். இரண்டாம் எண் கடையின் விற்பனையாளர் மணி அப்பகுதி ரேஷன் தாரர்களுக்கு டோக்கன்களை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE