கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மோகூர் மற்றும் புத்தந்துார் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாலித்தீன் கவரில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த தொட்டியம் சேர்ந்த விஜயகாந்த்,38; பெரியசாமி, 34; ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 55 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE