கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வில் 2,181 பேர் தேர்வு எழுதினர்.
தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையை அரசு வழங்குகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு எழுத பத்தாம் வகுப்பு மாணவர்கள் 2271 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.இவர்களுக்கான திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மொத்தம் 20 தேர்வு மையங்களில் நடந்தது.
தேர்வில் 2,181 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். 90 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. உளுந்துார்பேட்டை தேர்வு மையங்களில் சி.இ.ஓ., முனுசாமி பார்வையிட்டார்.அதேபோல், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஆகிய பகுதிகளில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE