திருப்பூர்:மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நடந்த சனி பெயர்ச்சி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வாக்கிய பஞ்சாங்கப்படி, நேற்று அதிகாலை, தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயம் உட்பட பல்வேறு கோவில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது.
திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், சுக்ரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. விஸ்வேஸ்வரர் கோவிலில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.வெள்ளகோவில் ஓலப்பாளையத்தில், ஸ்ரீ வானர ராஜசிம்மன் திருக்கோவிலில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, விசேஷ பரிகார ஹோமம் நடத்தப்பட்டன. தொடர்ந்து, வானர ராஜசிம்மனுக்கு, சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE