திருநெல்வேலி: ஊழியர்கள் முன்னிலையில், மேலாளர் வைகுண்டம் பழுது பார்த்தார். எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து, மூவரும் பலத்த காயமுற்றனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைகுண்டம், காளி இறந்தனர். பசுபதி, சிகிச்சையில் உள்ளார்.
குளத்தில் மூழ்கியமாணவன் பலி: நாகை மாவட்டம், வடுகச்சேரியைச் சேர்ந்தவர் ஜாசிம், 12; ஏழாம் வகுப்பு மாணவர். இவர், 26ம் தேதி மாலை, வீட்டின் அருகே உள்ள குளத்தில் மீன் பிடிக்க செல்வதாக, பெற்றோரிடம் கூறி சென்றார். இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. கீழ்வேளூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், குளத்தில் இருந்து, ஜாசிம் உடலை மீட்டனர்.
இதேபோல, நாகை, அக்கரைக்குளம் வடகரையைச் சேர்ந்தவர் கணேசன், 38; கொத்தனார். இவர், 25ம் தேதி மாலை, வீட்டின் அருகே உள்ள அக்கரை குளத்தில் குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், நாகை டவுன் போலீசில் புகார் அளித்தனர். 26ம் தேதி மதியம், கணேசன் உடல், தண்ணீரில் மிதந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE