நடுவீரப்பட்டு : பாலுாரில் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு ரூ.1.54 கோடி கடன் உதவி எம்.எல்.ஏ., வழங்கினார்.
பண்ருட்டி அடுத்த பாலுாரில் கீழ் அருங்குணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கறவை மாடு வாங்கிட கடன் வழங்கும் விழா நடந்தது.கூட்டுறவு வங்கி தலைவர் மணி தலைமை தாங்கினார். அண்ணாகிராம ஒன்றிய தலைவர் ஜானகிராமன், பாலுார் முன்னாள் ஊராட்சி தலைவர் சரவணன், ஒன்றிய செயலாளர் பாபு முன்னிலை வகித்தனர். கூட்டுறவு வங்கியின் செயலாளர் சாம்பசிவம் வரவேற்றார்.
பண்ருட்டி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 17 மகளிர் சுய உதவிக்குழுவினை சேர்ந்த 307 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் 1 கோடியே 54 லட்சம் கடன் உதவி வழங்கினார்.நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் சுந்தரி முருகன், ஜெகநாதன், கருணாகரன், ஏழுமேடு தலைவர் ரஞ்சித்குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோதண்டம், ஜெயசங்கர், ரூபலிங்கம், ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE