சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்யாணசுந்தரி சமேத கதம்வனேஸ்வரர் கோவிலில் நேற்று சனி பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, அதிகாலை 4.30 முதல் கதம்வனேஸ்வரருக்கு பால், சந்தனம், குங்குமம், இளநீர், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கல்யாணசுந்தரி அம்மனுக்கும், பரிவார தெய்வங்கள் விநாயகர், முருகர், துர்கை, பைரவர் மற்றும் நவகிரகங்களுக்கும் 16 வகை சிறப்பு அபிேஷகம் நடந்தது.பின்னர் சனிபகவானுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. சுற்றியுள்ள பல கிராம மக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE