திட்டக்குடி : எழுத்துாரில் உள்ள உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு ஹோமம் நடந்தது.சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு இன்று அதிகாலை 5.22 மணிக்கு பெயர்ச்சியடைகிறார். இதை முன்னிட்டு எழுத்துாரில் உள்ள உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு ஏழு மணிக்கு கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜை, சனி பகவானுக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. பூஜைகளை ராஜா மற்றும் பெரியசாமி சிவாச்சாரியார்கள் செய்து வைத் தனர். நேற்று காலை புனித கலச நீரினால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE