குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சார்பில் அயன் குறிஞ்சிப்பாடி தாழைவாய்க்கால் தற்காலிக பாலம் அமைக்க உதவி செய்யப்பட்டது.
அயன் குறிஞ்சிப்பாடி, தாழைவாய்க்கால் குழாய் பாலம், பரவணாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அரசு தரப்பில் நடவடிக்கை இல்லாததால், விவசாயிகள் அமைத்த தற்காலிக பாலமும் வெள்ளத்தில் மாயமானது. இதையடுத்து குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சார்பில், செயல் அலுவலர் ஜெயராமன் உள்ளிட்டோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.தற்காலிக பாலம் அமைக்க, 200க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள், ஜே.சி.பி., இயந்திரம் ஆகியவை, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு பணிகள் நடந்தன. பாலம் கட்டப்பட்டதால், அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE