விருத்தாசலம் : எருமனுார் காலனியில் ரூ.43 லட்சம் மதிப்பில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த எருமனுார் காலனியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், பற்றாக்குறை ஏற்படுகிறது. கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, ஆதி திராவிடர் நல திட்டத்தில், ரூ.43 லட்சம் மதிப்பில், புதிதாக போர்வெல் மற்றும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் சவுமியா வீரமணி, ஊராட்சி செயலர் பாவாடைராயன், துணைத் தலைவர் திருமலை, வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE