கடலுார், : கடலுாரில், கொரோனா மற்றும் புயல் காரணமாக கடந்த 9 மாதங்களாக முடங்கிய தாலிக்கயிறு தயாரிக்கும் பணி மீண்டும் துவங்கியுள்ளது.
தாலி புனிதமாய், மகத் துவம் நிறைந்ததாய் கருதப்படுகிறது. இந்த தாலிக்கயிற்றை, கடலுார் புருகீஸ்பேட்டையில் பழனி என்ற நெசவுத் தொழிலாளி, குடிசை தொழிலாக செய்து வருகிறார். பரம்பரையாக கைத்தறி நெசவு தொழில் செய்து வந்த அவர், விசைத்தறி உள்ளிட்ட நவீன மாற்றத்தால் கைத்தறி தொழில் நலிவடைந்தது.கடந்த சில ஆண்டுகளாக பருத்தி நுாலில் தாலிக் கயிற்றை உற்பத்தி செய்து, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு ஆர்டரின்பேரில் அனுப்பி வந்தார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தாலிக்கயிறு தயாரிக்கும் தொழில் முடங்கியது. அடுத்து ஏற்பட்ட நிரவி, புரெவி புயல்களும் தொழிலை துவங்க முடியவில்லை.இதனிடையே, 9 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தாலிக்கயிறு தயாரிக்கும் பணியை பழனி துவக்கியுள்ளார். வீட்டில் வேலையின்றி வருமானம் இல்லாமல் தவித்த பெண்கள் பலரும் அவரிடம் வேலை பார்த்து வருகின்றனர்.
பருத்தி உள்ளிட்ட நுாலை மூலப்பொருளாகக் கொண்டு தாலிக்கயிறு தயாரிக்கப்படுகிறது. மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்ட சுடுநீரில் நுாலை ஊற வைத்து, பின் வெயிலில் உலர்த்தி பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.இதுகுறித்து பழனி கூறுகையில், கொரோனா காலத்திற்கான நிவாரண உதவியை அரசு செய்தால் உதவியாக இருக்கும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE