கடலுார் : மார்கழி மாதத்தையொட்டி, தமிழ்நாடு பிராமணர் சங்க மஞ்சக் குப்பம் கிளை சார்பில், சிறுமிகளுக்கான கோலப் போட்டி திருவந்திபுரத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு மாநில செயலர் திருமலை தலைமை தாங்கினார். கிளை மகளிரணி செயலர் ரம்யா வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கிளை இளைஞரணி செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் அரிமா மாவட்ட தலைவி வித்யா ஸ்ரீ கோலப்போட்டியில் வெற்றி பெற்ற சிறுமிகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி பாராட்டினார். பெற்றோர், சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். கிளை பொருளாளர் நரசிம்மன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE