கோவை:கோவை சவுரிபாளையம், உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 37. பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் டெலிவரி செய்வதற்காக, கேக்குகளை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், பாலசுப்ரமணியத்தை மிரட்டி, ரூ.1,500 ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில்,பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், திருவண்ணாமலையை சேர்ந்த சத்தியமூர்த்தி, 38 என்பவர் பணத்தை பறித்தது தெரிந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE