கோவை:போக்குவரத்தை திருப்பி விடும் பணியில் ஈடுபட்டிருந்த, மேம்பால பணி ஊழியர், வாகனம் மோதி பலியானார்.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜோன் ஜோத்ரி, 27, திருச்சி ரோட்டில் நடந்து வரும் மேம்பால பணியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, ராமநாதபுரம் பகுதியில் போக்கு வரத்தை திருப்பி விடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ் வழியாக வேகமாக வந்த, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அவர் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம், விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE