கோவை:தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மேட்டுப்பாளையம் புளூஹில் அவென்யூவை சேர்ந்த பிரபுவின் மனைவி யோகப் பிரியா, 27. உடல்நலக் குறைவுக்காக நேற்று முன்தினம், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு உடல் நலம் தேறியது.இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்தார். பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE