போத்தனூர்:போத்தனூர், சர்ச் ரோட்டிலுள்ள அருள்முருகன் கோவிலில், சனிப்பெயர்ச்சி யாகம் நேற்று காலை நடந்தது.இரண்டரை மணி நேரம் நடந்த யாகத்தில், பரிகார ராசிக்காரர்கள், 120 பேர் பங்கேற்றனர். சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் அர்ச்சகர் சிவபாலன் தலைமையில், கோவிந்தசாமி, ரகு ஆகியோர் யாகத்தை நடத்தினர். கோவில் நிர்வாக குழு தலைவர் மணிலால் காந்தி, செயலாளர் ரங்கசாமி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement