ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் சீசன் காரணமாக, இளநீர் வரத்து அதிகரித்துள்ளது. அதேசமயம், பல பகுதிகளில் தேவை குறைந்துள்ளது. ஆண்டுதோறும், பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியிலிருந்து தினமும், 50 ஆயிரம் இளநீர் கேரள மாநிலம் சபரிமலை பகுதிகளுக்கு அனுப்பப்படும்.கொரோனா பாதிப்பு காரணமாக, சபரிமலையில் குறைந்த அளவிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், இளநீர் விற்பனை குறைந்துள்ளது. தேவை குறைவு காரணமாக, இந்த வாரம், இளநீர் விலை ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.இன்று, 28ம் தேதி முதல் ஒரு வீரிய ஒட்டு ரக இளநீர் பண்ணையில் வியாபாரிகளுக்கு, 17 ரூபாய்க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எடைக்கு வழங்கினால், ஒரு டன் இளநீர், 6,500 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஜன., மாதத்துக்கு பின் வெயில் அதிகரித்து, இளநீர் விலை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது, என, ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE