பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி, செல்வபுரத்தில் தன்னாசி ஈசர் கோவில் வளாகத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரத்தில் பின்னாக்கு சித்தர் எனப்படும் தன்னாசி ஈசர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது. தன்னாசி ஈசர் அருள்வாக்குப்படி, கோவிலின் ராஜகோபுரம் அடிக்கல் நாட்டுவிழா கடந்த, ஜன., 30ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. கட்டடப்பணிகளை திருப்பணிக் குழுவினர் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE