கூடலுார்:மசினகுடி அருகே, உடலில் காயத்துடன் ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைக்கு வனத்துறையினர், பழங்களுக்குள் மாத்திரை வைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை பொக்காபுரம் வனப்பகுதியில், காட்டு யானை உடலில் காயத்துடன் நடமாடுகிறது. இந்த யானை நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், தொட்டலிங்கி குடியிருப்பு பகுதியில் முகாமிட்டது. 'காயத்தால் சிரமப்பட்டு வரும் யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும்' என, ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில்,'கால்நடை டாக்டர் பரிந்துரைப்படி, பழங்களுக்குள் மாத்திரைகள் வைத்து யானையின் காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 'கும்கி' யானைகள் உதவியுடன், சிகிச்சை அளிப்பது குறித்து, ஆலோசித்து முடிவு செய்யப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE