கோவை:ஈ.வெ.ரா., படம் ஒட்டப்பட்டிருந்த கார் கண்ணாடியை, கல் வீசி உடைத்த நபர் கைது செய்யப்பட்டார்.கோவை லாலி ரோட்டை சேர்ந்தவர் ஞானவேல், 35. புகைப்பட கலைஞரான இவர் ஈ.வெ.ரா., ஆதரவாளர். தனது காரில் ஈ.வெ.ரா., படம், கருத்துகள் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார்.நேற்று காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். லாலி ரோட்டில் வரும்போது பைக்கில் வந்த இருவர், கார் கண்ணாடி மீது கல் வீசியதால் நொறுங்கியது. பைக்கில் தப்பிய அவர்களை காரில் துரத்திய ஞானவேல், வேளாண் பல்கலை முன் தடுத்து நிறுத்தினார்.தகராறு ஏற்பட்ட நிலையில், மீண்டும் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிவிட்டு, இருவரும் பைக்கில் தப்பினர்.இதுகுறித்து ஞானவேல் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார், வடவள்ளியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ராஜேஷ், 25, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE