கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று, கொரோனா குணமான 109 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கோவையில் நேற்று, 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 51 ஆயிரத்து, 980 ஆக உயர்ந்தது. நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை, 645 பேர் பலியாகியுள்ளனர்.அரசு, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 109 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 50 ஆயிரத்து, 478 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE