திருப்பூர்:தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், அவிநாசி ரோடு ஆசர் மில் பஸ் ஸ்டாப் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, அப்பகுதி மக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் இரவு, போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு ஒரு மூட்டையுடன் பைக்கில் வந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், திருப்பூர் காங்கயம் ரோடு, கே.எம்.பி. காலனி பகுதியை சேர்ந்த ஹைதர் அலி, 52, என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து, 15.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பைக் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட ஹைதர் அலி, மனித நேய ஜனநாயக கட்சியின், திருப்பூர் மாவட்ட செயலாளராக இருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE