குன்னுார்:தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர்சுப்ரமணி, 57, பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த சதீஷ்குமார் இருவரும் எமரால்டு கூட்டு குடிநீர் திட்ட ஒப்பந்த பணியாளர்கள். நேற்றிரவு பைக்கில், மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, லாஸ் நீர்வீழ்ச்சி பாலம் அருகே, டிப்பர் லாரி பைக் மீது மோதியது. இச்சம்பவத்தில், சுப்ரமணியம் உயிரிழந்தார். சதீஷ்குமார் குன்னுார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE