அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தோட்டக்கலைத்துறையில் வாங்கி நடவு செய்த கத்தரிசெடிகள் காய்க்காததால்விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
கரடிக்கல் பகுதியில் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டு 90 நாட்களை கடந்தும் கத்தரி காய்க்கவில்லை. 60 நாட்களில்காய்க்க துவங்கி மூன்று மாதங்கள்வரை விளைச்சல்இருக்கும். பலமுறை மருந்தடிக்கும் செலவு தான் அதிகரிப்பதாகவிவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விவசாயி ஆழகர்சாமி கூறியதாவது: மானியமாக வழங்கப்பட்ட விதைகளால் விளைச்சல் இன்றி நஷ்டம்ஏற்பட்டுள்ளது. எங்களுடன் ஒன்றாக விதைவங்கி நடவு செய்த சிலருக்கு கத்தரி காய்த்துள்ளது. இருப்பினும் வயலை ஆய்வு செய்த அதிகாரிகள்காய்க்கும் என தெரிவித்துள்ளனர், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE