உசிலம்பட்டி : உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் 'நாட்டுப்புற தோசையும், நானோ டெக்னாலஜியும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
இயற்பியல்துறை பேராசிரியர் பால்ராஜ் வரவேற்றார். கல்லூரி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்வர் ரவி, தாளாளர் பாண்டியன், பொருளாளர் வனராஜா, துணை முதல்வர் ஜோதிராஜன், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், நிர்வாகக்குழு உறுப்பினர் சின்னன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். மதுரை தியாகராஜர்பொறியியல் கல்லுாரி இயற்பியல் துறை பேராசிரியர் மகேந்திரன் பேசினார்.முன்னதாக 'இந்தியாவின் மண்வளங்கள்' என்ற தலைப்பில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி தாவரவியல் துறை இணைப் பேராசிரியர் ராஜேந்திரன் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE