மேலுார் : மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் மேலுார் அரசு கல்லுாரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் அன்பழகன், மதுரை கல்லுாரி விலங்கியல் துறை இணை பேராசிரியர் தினகரன் மற்றும் பாரதிதாசன் பல்கலை சுற்றுச் சூழல் உயிர்தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர் அருண்பிரசன்னா ஆகியோர் கொரோனா தடுப்பு குறித்து ஆராய்ச்சி கட்டுரை எழுதினர்.மூச்சுபயிற்சி, பிரணாயாமம், உடற்பயிற்சி செய்வது மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவு வகைகள் மூலம் கொரோனாவிலிருந்து விடுபடுவது குறித்து விளக்கினர். இந்த ஆய்வு கட்டுரையை ஜெர்மன் ஆராய்ச்சி பத்திரிகை உறுதிபடுத்தி வெளியிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE