திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் 179 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 10 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு மாநில, தேசிய அளவிலான இரண்டு கட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் இத்தேர்வு எழுத 2755 மாணவர்கள் விண்ணப்பித்தனர். நேற்று 30 மையங்களில் மனத்திறன், கற்றல் திறன் என 2 பிரிவுகளாக காலை 9:00 முதல் 11:00 மணி வரை, 11:30 முதல் 1:30 மணி வரை தேர்வு நடந்தது. மொத்தம் 2756 பேர் தேர்வு எழுதினர். அதில் 179 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE