சித்தையன்கோட்டை, : சித்தையன்கோட்டையில் தொடரும் ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் ரோடு குறுகி வருகிறது.
பேரூராட்சி 18 வார்டுகளிலும் குடியிருப்பு, வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் அதற்கேற்ப அடிப்படை வசதிகள் இல்லை. செம்பட்டி, வத்தலக்குண்டு, அய்யம்பாளையம், ஆத்துார், திண்டுக்கல், சித்தரேவு வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.செம்பட்டி, போடிக்காமன்வாடி, ஆத்துார், அழகர்நாயக்கன்பட்டி ரோடு என பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. மெயின்ரோடு மட்டுமின்றி அனைத்து தெருக்களிலும் ஆக்கிரமிப்புகள் தொடர்கிறது. இதனால் ரோட்டில் அகலம் தினமும் குறுகி வருகிறது.
அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பேரூராட்சியினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE