திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விபட்டி பூங்காவிற்குள் மாநகராட்சி சார்பில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்க ஒரு பிரிவினர் எதிர்ப்பும் மற்றொரு பிரிவினர் ஆதரவும் தெவிரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதி பெண்கள் ஹார்விபட்டி நகராட்சி அலுவலகம் முன் மேல்நிலை தொட்டி அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அ.தி.மு.க., பா.ஜ., தே.மு.தி.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.பா.ஜ., ராமதாஸ் கூறியதாவது: நான் ஹார்விபட்டி பேரூராட்சி தலைவராக இருந்தபோது பூங்காவிற்குள் நான்கில் ஒரு பகுதியில் மேல்நிலை தொட்டிகள் கட்டலாம் என தீர்மானிக்கப் பட்டது. அனைத்து கட்சி கவுன்சிலர்களும் அதற்கு சம்மதித்து விட்டு தற்போது எதிர்க்கின்றனர், என்றார்.
ஹார்விட்டி பூங்கா பாதுகாப்பு குழுவினர் தொட்டி அமையவுள்ள இடத்தில் திரண்டனர். உறுப்பினர் ராஜூ கூறியதாவது: பூங்காவிற்குள் இரு மேல்நிலை தொட்டிகள் உள்ளன. 3வது கட்டப்பட்டால் விளையாட்டு பயிற்சி, நடைபயிற்சியில் ஈடுபடுவோர் பாதிக்கப்படுவர், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE