மேலுார் : மதுரை மாவட்டம்மேலுார் அருகே தெற்குத் தெருவில் தனியார் கல்லுாரியில் சுற்றுலா ெஹலிகாப்டர் வர தாமதமானதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த ெஹலிகாப்டர் மக்கள் நீதி மையம் தலைவர் கமலை திருச்சியில் இறக்கி விட்டு பின் வந்தது.கல்லுாரி நிர்வாகம் சார்பில் ரூ.6 ஆயிரத்தில் மதுரையை ெஹலிகாப்டரில் 15 நிமிடங்கள் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விடுமுறை நாளான நேற்று ெஹலிகாப்டரில் பயணிக்க நுாற்றுக்கும் மேற்பட்டோர் கல்லுாரிக்கு சென்றனர். ஆனால் அந்த ெஹலிகாப்டர் மதுரை விமான நிலையத்தில் இருந்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலை திருச்சியில் இறக்கி விட சென்றது.
இதனால் ெஹலிகாப்டர் வர தாமதமானது. பயணிகள் கல்லுாரி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ெஹலிகாப்டர் வந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE